/* */

பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு என்பது பல்வேறுபட்ட உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுப்பாகும். இக்கணக்கெடுப்புப் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, செல்போன் எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள் மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, பான் எண் மற்றும் ஜி.எஸ்.டி எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. எனவே கணக்கெடுப்பிற்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Dec 2020 5:28 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  6. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  7. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  8. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  9. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?