/* */

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்..!

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆட்சியர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்..!
X

மக்களவைத் தேர்தல் மின்னணு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

.தென்காசி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆட்சியர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1,743 வாக்கு சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தென்காசி மக்களவைத் தொகுதியில் மட்டும் 67.55. சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி கொடி குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டுவரப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்து வாக்கு பெட்டிகள் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

இதனையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.பி கல்லூரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு உள்பட ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 20 April 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...