காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்
ஆசிரியருடன் தேர்வு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் மாணவிகள்.
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மார்ச் ஒன்றாம் தேதி துவங்கிய பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் 5680 மாணவர்களும் 673 மாணவிகளும் என மொத்தம் 12,413 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 11,45 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு தேர்ச்சி பெற்று மாவட்டத்தின் சராசரி தேர்ச்சி விகிதத்தை 92.28 என நிர்ணயித்தனர். இதில் மாணவர்கள் 89 சதவீதமும் மாணவிகள் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இது கடந்த ஆண்டு காட்டிலும் 1.4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி என்பது மாணவிகள் மாணவர்களை விட 5.9% தேர்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் என்பதும் இது கடந்தாண்டை காட்டிலும் 2 .32 சதவீதம் கூடுதலாகும். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முப்பத்தி மூன்றாவது தரவரிசியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 613 பேர் தங்கள் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதத்தை காணும் நிலையில், தாய் மொழியாம் தமிழ் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய 12,413 மாணவ மாணவிகளின் 12,131 நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 282 நபர்கள் தோல்வியுற்றுள்ளனர்.
ஆனால் ஆங்கில பாடப் பிரிவில் 243 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை என்பது பார்க்கையில் அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கில பாடப்பிரிவு கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதை எளிதாக்கி தமிழை கடினமாக்கி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu