திருவண்ணாமலை நகராட்சியை பாமக முற்றுகை
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை நகராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் வன்னியர்கள் அதிக பெரும்பான்மையினர் உள்ளதாகவும் வன்னியர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கல்வியிலும் மேம்பாட்டு நிலையில் உள்ள சமுதாயங்களின் அளவிற்கு வன்னியர்களால் உரிய இடங்களை பெற முடியாத நிலை உள்ளதாகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை முன்பு இருந்து நகராட்சி வரை ஊர்வலமாக வந்து நகராட்சி வாயிலை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரனிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.