தொட்டுவிடும் தூரத்தில் அபாயம் : மின் விபத்தை தடுக்க தென்னை மட்டை கட்டிய அவலம்
சுரண்டை அருகே சேர்ந்தமரம் மெயின் ரோட்டில் மின் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை போர்டில் தென்னை மட்டையை கட்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
சுரண்டையிலிருந்து வீரசிகாமணி செல்லும் ரோட்டில் வீரசிகாமணி விலக்கிற்கு முன்பாக பெட்ரோல் பங்க் முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில் பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயர் பலகையை ஒட்டி ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்களில் ஹை வோல்டேஜ் மின்சாரம் செல்லும் வயர் செல்கிறது. அதனை சரிவர கவனத்தில் கொள்ளாத நெடுஞ்சாலை துறையினர் அதனை ஒட்டி போர்டை அமைத்துள்ளனர்.
இதனால் காற்று அடிக்கும்போது மின்சார ஒயர் பெயர் பலகையில் பட்டு பெயர்ப்பலகை அமைக்கப்பட்டு உள்ள கம்பத்தில் மின்சாரம் வந்துள்ளது.இதனால் உடனடியாக பெயர் பலகை அருகில் தென்னை மட்டையை கொண்டு கட்டி மின்சார ஒயர் பலகையில் உரசாத படி கட்டியுள்ளனர். இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் தென்னை மட்டை கீழே விழுந்து மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஹை வோல்டேஜ் மின்சார ஒயர் செல்வதால் அருகில் சென்றாலே ஷாக் அடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது மேலும் நடந்து செல்பவர்கள், விவசாய பணிகளுக்காக செல்பவர்கள், .கோவிலுக்கு வரும் குழந்தைகள், அதனருகில் விளையாடுவதால உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தென்னை மட்டை அகற்றிவிட்டு மின்சார ஒயர் பெயர் பலகை மீது படாதவாறு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.