Begin typing your search above and press return to search.
குற்றால அருவியில் சீரான நீர் வரத்து குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதாலும் விடுமுறை என்பதாலும் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தென்காசியை அடுத்த குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லை. இதனால் தண்ணீர் வரத்து குறைந்து சீராக விழுகின்றது. கிறிஸ்துமஸை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ளதால் வெளியூரிலிருந்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஐந்தருவி புலியருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டுகிறது. இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.