திடீர் நெஞ்சுவலி:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதன்காரணமாக அந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈ.வே.ரா.வின் தந்தையும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்தார். கடந்த வாரம் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.