/* */

பொங்கல் வசூல் திமுக பிரமுகர் மீது புகார்

பொங்கல் வசூல் திமுக பிரமுகர் மீது புகார்
X

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு அன்பளிப்பு வசூல் செய்த திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் ரூ. 2500 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை தூத்துக்குடி பிஅன்டி காலனியில் உள்ள நியாயவிலை கடையில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அமலி ராஜன்,பகுதி செயலாளர்கள் சேவியர் முருகன்,அம்மா பேரவை மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு வழங்கிய 2500 ரூபாயில் அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் கண்ணன் என்பவர் அன்பளிப்பு வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர். சிப்காட் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அந்த கடையின் விற்பனையாளர் சுந்தர் மற்றும் எடையாளர் நடராஜன் ஆகியோர் குறித்து வட்டார வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 8 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...