/* */

புறநகர் காவல் நிலையங்களில் நெல்லை மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு.

நெல்லை காவல் நிலையங்களுக்கு வரும் புகாரின் அடிப்படையில் உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண காவல்துறையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரை.

HIGHLIGHTS

புறநகர் காவல் நிலையங்களில் நெல்லை மாவட்ட எஸ்பி  திடீர் ஆய்வு.
X

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புறநகர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு.பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங் களில் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகவும், அவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.காவலரை கண்டு பொதுமக்கள் அங்கம்மாள் தயங்காமல் தங்களுடைய பிரச்னைகளை கூற முன்வரவேண்டும்.

மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் காவலர்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களை‌ பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ், காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா