Begin typing your search above and press return to search.
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க காவல்துறை தடை விதித்தனர்.இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை அளவு குறைந்தது. இதை தொடர்ந்து இன்று காலை அருவியில் தண்ணீர் வரத்து சீரானது. பாதுகாப்பு வளையத்திற்குள் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.