நாமக்கல்லில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்தியஅரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும், தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.