பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாத யாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இன்று மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்களை பாத சாரிகளின் கை, மணிக்கட்டு பகுதி, பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒட்டினார்.பின்னர் எஸ்பி., பாதசாரிகளிடம் பேசும்போது, பாதசாரிகள் சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதித்து பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்.இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி., வெங்கடேசன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.