பனிமயமாதா பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலயத்தில் 2021 ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 2021 ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத்தில் 2021 ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான பொதுமக்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு புதிய ஆண்டை வரவேற்றனர். 2020ஆம் ஆண்டு பல்வேறு இன்னல்களை சந்தித்த மக்கள் இந்த ஆண்டு சுபிட்சமாக இருக்க வேண்டும் எனவும் எவ்விதமான நோய் நொடியின்றி மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கை குலுக்கி தங்கள் வாழத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.