கிராமிய கலைகளை போற்றுவோம் – நாமக்கல் ஆட்சியர்
தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் கிராமிய கலைகளை அனைவரும் போற்றி பாதுகாத்திட வேண்டும், நாமக்கல்லில் நடைபெற்ற கலை பண்பாட்டு துறையின் ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சியின் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
HIGHLIGHTS
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டு துறையின் சேலம் மண்டலத்தில் நடப்பாண்டின் கண்காட்சி நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் ஆணையர் கலையரசி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக கிராமிய கலைகள் உள்ளது. இதனை அனைவரும் பாதுக்காத்திட வேண்டும். இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த கலை பண்பாட்டு துறையின் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கலந்துக் கொண்டு கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த கண்காட்சியில் ஓவியச் சிற்பக் கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது.