Begin typing your search above and press return to search.
மோகனூர் ஒன்றியத்தில் எம்.பி சின்ராஜ் பொதுமக்களிடம் குறைகேட்பு
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் எம்.பி., சின்ராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அண்ணா கலையரங்கத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. எம்.பி சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பிடிஓக்கள், வருவாய்த் துறை, குடிநீர் வசதி, நெடுஞ்சாலை, மின் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ராஜசேகர், திமுக ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, விவசாய அணி செயலாளர் ரவி, பரமசிவம், வாங்கிலி, சசிகுமார், செல்வராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.