/* */

பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்; அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Namakkal news- பணிக்கொடையாக, ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என, நாமக்கல்லில் நடந்த அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்;  அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
X

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற, அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில், மாநில செயலாளர் சாந்தமூர்த்தி பேசினார்.

Namakkal news, Namakkal news today- பணிக்கொடையாக, ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என, நாமக்கல்லில் நடந்த அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், கோட்ட அளவிலான, 12வது மாநாடு, நாமக்கல்லில் நடைபெற்றது. கோட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். மாநில செயலாளர் சாந்தமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அஞ்சலக ஊழியர்களுக்கு, 2019ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய ஆர்.பி.ஐ.எல். இன்சென்ட்டிவ் நிலுவை தொகையை பெற்றுத்தரவேண்டும். இறந்துபோன கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வாரிகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மகளிர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு, மகப்பேறு விடுப்புடன் கூடிய பணப்பலன்கள் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவ இன்சூரன்ஸ், குரூப் இன்சூரன்ஸ் ஆகியவை கமிட்டியின் பரிந்துரைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திரளான அஞ்சலக ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 April 2024 2:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...