/* */

சிப்காட் திட்டத்தை அரசு கைவிடக்கோரி கிராமசபையில் தீர்மானம்

வளையப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிப்காட் திட்டத்தை அரசு கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

சிப்காட் திட்டத்தை அரசு கைவிடக்கோரி கிராமசபையில் தீர்மானம்
X

மோகனூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி, வளையப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி அப்பகுதில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நிலங்களை கையகப்படுத்தினால், வாழ்வாரம் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக, கொமதேக, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர்.

தீர்மானத்தை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரஸ்வதி, கிராமசபை தீர்மான நோட்டில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எழுதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த கிராம சபை கூட்டத்தில், இதே தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என ஊராட்சி தலைவர் கூறியிருந்த நிலையில், நேற்று பொதுமக்கள் வலியுறுத்தியதால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On: 2 May 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது