Begin typing your search above and press return to search.
மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர், 19 வயது வாலிபர். அவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படித்துவந்த, 16 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவ.18ம் தேதி அந்த வாலிபர் சிறுமியை கூட்டிச் சென்று, தாலி கட்டி அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து, தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், குழந்தை நலக்குழுமத்தில் புகார் செய்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் குழந்தை திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையொட்டி, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.