/* */

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின்  கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தைவிட குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல் நகரில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடி மாதத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விபரம்:

குமாரபாளையம் 46 மி.மீ., நாமக்கல் 34 மி.மீ, கலெக்டர் அலுவலகம் 28 மி.மீ, பரமத்திவேலூர் 6 மி.மீ, புதுச்சத்திரம் 2 மி.மீ, சேந்தமங்கலம் 7 மி.மீ, திருச்செங்கோடு 7 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம்130.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Updated On: 8 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...