அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

Erode news- தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Erode News, Erode Today News, Erode Live News - அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம் செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன. இதனால் யானைகள் போன்ற விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகே உள்ள விவசாய நிலங்கள், கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை எண்ணமங்கலத்துக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள தோட்டத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த காட்டு யானை தோட்டத்துக்குள்ளேயே அங்கும் இங்குமாக உலா வந்தது. காட்டு யானையை கண்டதும் அங்கிருந்த விவசாயிகள், வனத்துறையினர் ஒன்று திரண்டு வந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். எனினும் அந்த காட்டு யானையால், தோட்டத்தில் உள்ள எந்த பயிருக்கும் சேதம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story