/* */

வாடிக்கையாளர் போல வந்து காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் : நூதன கொள்ளை

நாமக்கல் பழைய கார் விற்பனை நிலையத்தில், மர்ம நபர்கள் நூதன முறையில் காரை கடத்திச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

வாடிக்கையாளர் போல வந்து காரை  ஓட்டிச் சென்ற  மர்ம நபர்கள் : நூதன கொள்ளை
X

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய கார்கள் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான காரை வாங்க விரும்புவதாக மேலாளர் ரமேஷிடம் கூறி உள்ளனர். மேலும் அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து உள்ளனர். அதை நம்பி அந்த விற்பனை நிலையத்தின் மேலாளர் ரமேஷ், 2 பேரையும் காரை ஓட்டி பார்க்க அழைத்து சென்றுள்ளார். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை சிறிது தூரம் ஓட்டிச் சென்ற பிறகு, காரில் அதிக சத்தம் வருவதாக, அதை நிறுத்தினர். பின்னர் மேனேஜர் ரமேஷை கீழே தள்ளிவிட்டு அவர்கள், காரை அதிவேகமாக கடத்திச் சென்றுவிட்டனர்.

தகவல் கிடைத்ததும், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் நல்லிபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த காரின் உரிமையாளர் ஏற்கனவே, காருக்கு கடன் வாங்கியதும், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல், அந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்து, தனியார் விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால் பைனான்ஸ் கம்பெனியினர் காரை கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...