/* */

நாமக்கல் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பஸ் மோதியதால், டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (42). டிராக்டர் டிரைவர். இவர் சம்பத்தன்று காலை டிராக்டரில் களங்காணி பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்கு திப்பி பாரம் ஏற்றிக்கொண்டு ராசிபுரம் நோக்கி டிராக்டரை ஓட்டிச்சென்றார். டிராக்டர் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென டிராக்டரின் பின்பகுதியில் மோதியது.

இதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பெருமாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் சந்தோஷ்குமார் (44), பஸ்சில் பயனம் செய்த, திருநெல்வேலியை சேர்ந்த ஜெயசுதா (36) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.

Updated On: 2 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!