முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்

முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி ஈரோடு மண்டலம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களான 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) 18ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 19ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 17.05.2024 முதல் 19.05.2024 வரை உள்ள நாட்களுக்கு ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story