குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்-  மனைவி உயிரிழப்பு

தங்கவேல்

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியானார்கள்.

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியானார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, குள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கவேல் (வயது 57,) சரஸ்வதி( 54,) தம்பதியர் வசித்து வந்தனர்.

இன்று காலை தாங்கள் வளர்க்கும், யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து, இலைகள் பறித்து ஆடு, மாடுகளுக்கு போட, இலைகள் பறிக்கும் வேலையில் சரஸ்வதி ஈடுபட்டிருந்தார். இரும்பு கொக்கியில் பறித்த போது, மேலே உள்ள மின் கம்பியில் கொக்கி பட்டதும் மின்சாரம் தாக்கி, அலறியபடி கீழே விழுந்தார், இவரது அலறல் சத்தம் கேட்ட தங்கவேல் ஓடி வந்து இவரை காப்பாற்ற முயற்சிக்க, இவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சரஸ்வதி.

இதனைப்பார்த்த இவர்களது பக்கத்து தோட்டக்காரர்களான மோகன் மற்றும் தம்பதியரின் மகள் சவுமியா ஆகிய இருவரும் ஓடி வந்து பார்த்த போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் இருவரும் பலியானார்கள். இது குறித்து குமாரபாளையம் போலீசில் சவுமியா புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story