/* */

ஆஞ்சநேயர் கோயிலில் தேரோட்டத்திற்கு தங்கத்தேர் தயார்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கத்தேர், தேரோட்டத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்து தேர் இழுக்கலாம்.

HIGHLIGHTS

ஆஞ்சநேயர் கோயிலில் தேரோட்டத்திற்கு தங்கத்தேர் தயார்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், 5 மாதங்களுக்குப் பிறகு, தேரோட்டத்திற்காக, தங்கத்தேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரித்து செல்கின்றனர்.

பதிவு செய்துள்ள கட்டளைதாரர்கள் மூலம், தினசரி காலை 9.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள்தூள், திருமஞ்சள், நல்லெண்ணை, பஞ்சாமிர்தம் போன்ற வாசøனை திரவியங்களால் சுவாமிக்கு அபிசேகம் நடைபெறும். மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். கட்டளைதாரர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம், தங்க கவசம், முத்தங்கி, மலர் அங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கு சுவாமி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ. 2,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிசேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கோயில் உட்பிரகாரத்தில் தடுப்புகள் மற்றும் சாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மற்றும் கோயில் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் தங்கத் தேரோட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.
தற்போது கோயில் உட்பிரகாரத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சாரங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் இன்று 9ம் தேதி முதல் தங்கத்தேர் இழுப்பதற்காக பக்தர்கள் முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தங்கத்தேர் இழுக்கலாம் என கோயில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Updated On: 9 July 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்