நாமக்கல்லில் 36 தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சிறப்பு முகாம்
நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு 2 தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் 36 துணை தபால் அலுவலகங்கள் உள்ளன. இங்கு தற்போது ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
இங்கு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுத்தல். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் , பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. 5 வயது மற்றும் 15 வயது முடிந்து தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழிகளை புதிதாக பதிவுசெய்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. மற்ற வயதினர்களுக்கு ரூ.100/- கட்டணம் செலுத்தவேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் , பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி சேர்த்தல் போன்ற திருத்தம் செய்ய வேண்டுபவர்கள் ரூ.50/- செலுத்தவேண்டும். தொலைபேசி எண், மற்றும் இமெயில் திருத்தம் செய்ய துணை ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. பிற திருத்தங்களை மேற்கொள்பவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டுவரவேண்டும் .
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அனுகி தங்களுக்கான சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.