/* */

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா: தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  

HIGHLIGHTS

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா:   தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு
X

நெசவுத் தொழிலில் இந்தியாவிலேயே தமிழகம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட பாரம்பரிய நெசவுத்திறனுக்குப் பெயர்போன நமது மாநிலத்தில் புதிதாக ' சிறிய கைத்தறி பூங்காக்கள்' அமைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது அரசு. இவை பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க உதவுவதுடன், இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் வாய்ப்பாக அமையும்.

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளங்கும் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும் அதிகளவில் அந்நியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது தமிழக முதல்வரின் கனவுத் திட்டம் ஆகும். இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் வளர்ச்சிப் பெருகி வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தமிழ்நாடு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், Preloom, Post Loom மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் / மொத்த விற்பனையாளர்கள் / சில்லறை விற்பனையாளர்கள் / கூட்டுறவு சங்கங்கள் / சங்கங்கள் / தொழில்முனைவோர் மற்றும் மாஸ்டர் வீவர் நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, டிசைன் தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.

கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், காஞ்சிபுரத்தில் அமைக்கப்படவுள்ள, மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 22.02.2024-க்குள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்கள்.

Updated On: 16 Feb 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு