கன்று பராமரிப்பு பெட்டகம் - பயணாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கல்
பெட்டகத்தில் தாது உப்பு , விட்டமின் கலவை , கழிச்சல் தடுப்பு மாத்திரை, 50 கிலோ தீவனம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது
HIGHLIGHTS
தமிழக அரசு சார்பாக பெண்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக விலையில்லா கறவை மாடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. இதற்கான கொட்டகை அமைப்பதற்கு கூட மானிய விலையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பெண்கள் தங்களது சுய வருமானத்தை ஈட்டும் வகையிலும் வாழ்வில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் வகையில் இது பெரிதும் உதவுவதாக பயனாளிகள் கூறி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் இலவச கறவை மாடு பெற்ற பயனாளிகளுக்கு இலவச கன்று பராமரிப்பு பெட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
இதில் கன்றுக்கு தேவையான 50 கிலோ தீவனம் , தாது உப்பு , விட்டமின் கலவை , முதலுதவி மருந்துகள் , கழிச்சல் தடுப்பு மாத்திரை உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.இவைகள் மூலம் இளம் கன்றுகள் நன்கு வளர்ந்து வர அதிக வாய்ப்புள்ளதால் இதனை அறிமுகப்படுத்தி உளளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்களுக்கு பேறுகாலத்திற்கு பின் அரசு சார்பில் குழந்தை பராமரிப்பு பெட்டகம் இந்தப்படுவது போல் தற்போது கால்நடைகளுக்கும் தற்போது தமிழக அரசால் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர் பயனாளிகள்.