/* */

திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை
X

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் நேற்று ஆவின் துறையை சார்ந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு உள்ள அதிகாரி ஒருவர் லிட்டர் கணக்கில் பால் முறைகேடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் துறையில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும். அதன்படி நேற்று அதிகாரிகள் இங்கு வந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இது வழக்கமாக நடைபெறும் சோதனை தான் என்று தெரிவித்தார். சோதனையை முடித்தபின்பு நேற்று மாலை அதிகாரிகள் சென்றனர். இன்றும் சோதனை தொடருமா, எதற்காக இந்த சோதனை, முறைகேடுகள் நடைபெற்று உள்ளதா? என எந்த தகவலும் ஆவின் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்படவில்லை.

Updated On: 18 Jun 2022 1:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!