/* */

பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை வேளாண்மை இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிவிக்க வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

வடகிழக்கு பருவமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படும் பயிர் சேதங்களை குறித்து வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையால் ஆய்வு செய்து சேத விபரங்கள் கணக்கிடப்படும். மழையால் பயிர் சேதம் அடைந்துள்ள விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிர் சேதம் குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்.

அதேபோல் வட்டார அளவில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Oct 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா