அக் 2 ல் புதுக்கோட்டையில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம்: ஆட்சியர் தகவல்
இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom run-2.0) புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்குகிறது
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் 02.10.2022 அன்று நடத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல்.
இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom run-2.0) 2 கி.மீ தூரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி அனைத்து பங்கேற்;பாளர்களும் பங்குபெறும் வகையில் 02.10.2022 அன்று காலை 7.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 02.10.2022 அன்று காலை 7.00 மணிமுதல் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom run-2.0) நேருயுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோருடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி நடத்தப்பட உள்ளது.
இதன்மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம். மேலும் சமூக இடைவெளியினை பின்பற்றும் போதும் உடற்தகுதியின் அவசியத் தேவையினை உணர்ந்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும். சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற் றிலிருந்து விடுபடுவதற்கும் உடல் தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலபடுத்தவும் ஆரோக்கிய மற்றும் பொருத்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றவும் இயலும்.
அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அனைத்துப் பங்குதாரர்களும் பங்கேற்க்கும் பொருட்டு 02.10.2022 அன்று காலை 7.00 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ள இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் பங்கேற்று தங்கள் உடல்தகுதியினை மேம்படுத்திட வேண்டும்.மேலும், விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 74017 03498 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.