அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு
Latest Accident News -நாமக்கல் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
Latest Accident News - நாமக்கல் நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரஞ்சித் ( 20). ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர்கள் இருவரும் கோழிப்பண்ணைகளில் கூண்டு அமைக்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் வள்ளிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காவேட்டிப்பட்டி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2