Begin typing your search above and press return to search.
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை சாவு
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள பெரமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (65) விவசாயி. அவரது மனைவி சின்னமாள். அவர்கள் மகன் தமிழரசு, செங்கப்பள்ளி கிராம பஞ்சாயத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை 7.15 மணிக்கு பொன்னுசாமி தனது வீட்டிலுள்ள மின்சார சுவிட்சு போர்டில் பிளக்கை செருகி, சுவிட்சு போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட மனைவி சின்னமாள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.