/* */

பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் டூ வீலர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

பரமத்திவேலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சையது கவுஸ் (62). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25-ந் தேதி பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மொபட் ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சையது கவுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மொபட்டில் வந்த, பரமத்திவேலூர் கிழக்கு தெருவை சேர்ந்த ரவி (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...