/* */

நாமக்கல் : மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 33,953 பேர் பயன்

நாமக்கல் மாவட்டத்தில் 4ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரு நாளில் 33,953 பேருக்கு கொõரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 4ம் கட்ட கெரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவ்வகையில், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட 440 நிலையான முகாம்கள், 21 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 461 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர், உள்ளாட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 4,400 பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதார் அட்டை பதிவு செய்து பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி கோவாக்சின் மற்றும் கோவி ஷீலட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நடக்க முடியாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். 4ம் கட்ட சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 33 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 4 Oct 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!