நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
Vaccination Camp -நாமக்கல் மாவட்டத்தில் நாளை 38வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.
HIGHLIGHTS
Vaccination Camp -இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 15.15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி, 13 லட்சத்து 75 ஆயிரத்து 538 பேருக்கும் (90.79 சதவீதம்), இரண்டாம் தவணை தடுப்பூசி, 11 லட்சத்து 37 ஆயிரத்து 218 பேருக்கும் (75.06 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த, 37 மெகா தடுப்பூசி முகாம்களில், 11 லட்சத்து 20 ஆயிரத்து 363 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். நாளை 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பஞ்., டவுன் பஞ்., நகராட்சி பகுதிகளில் உள்ள, அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதா நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட 1,240 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், முதல் தவணை போட்டு இரண்டாவது தவணைக்காக காத்திருப்பவர்களும் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2