/* */

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்
X

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு விழாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு, தனது கோட்பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது.

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறு என்று, குருத்தோலையை ஏந்தி ஊர்வலமாக சென்று சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. தமிழகத்திலும், நேற்று அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபம் இன்று நடந்தது. பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில் நடந்த வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மோகனூர் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசீலி ஆலயத்தில் பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடலை பாடி, கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். கடந்த, பிப்ரவரி 14ம் தேதி, சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த தவக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு பவனியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

Updated On: 24 March 2024 11:42 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!