/* */

நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் அரவிந்த் (18). துரைராஜ் ஆட்டோ மூலம், டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். இதற்கு அரவிந்தன் துணையாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு நாமக்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில், கடை ஒன்றிற்கு மின்சார மோட்டாரை இயக்கி, குழாய் வழியாக அரவிந்த் குடிநீர் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!