Begin typing your search above and press return to search.
கிருஷ்ணகிரி மழை வெள்ளத்தில் மீன்களை பிடிக்க குவிந்த கூட்டம்
கிருஷ்ணகிரியில் மழை வெள்ளத்தில் வந்த மீன்களை பிடிக்க போட்டி போட்டு பொதுமக்கள் குவிந்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரியில் வடகிழக்கு வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, குட்டைகள் நிரம்பி மழைநீர் சாலையில் வர ஆரம்பித்தது. அப்போது பல ஆயிரக்கணக்கான மீன்கள் தண்ணீரில் அடித்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மீன் பிடிக்கப் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்.
சிறிய மீன் முதல் 2 முதல் 3 கிலோ மீன் வரை கிடைத்ததாக பொதுமக்கள் கூறினர். அருகிலிருந்த வீடுகளுக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களைப் பிடித்து பொதுமக்கள் எடுத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிகழ்வு சுமார் பலவருடங்கள் ஆனதால் பொதுமக்களிடையே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.