காஞ்சிபுரம் சார்பதிவாளர் சம்பளத்துக்கு ஆள்வைத்து, லஞ்சம் வாங்கியது அம்பலம்
காஞ்சிபுரம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதற்கென்றே தனியாக ஒரு ஆளை வைத்து, அவருக்கு இவர் மாத சம்பளமும் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது இணை சார்பதிவாளர் அலுவலகம். இங்கு சார்பதிவாளராக பணிபுரியும் சீனுவாசன் ஓய்வு பெற்ற ஊழியர் பன்னீர்செல்வம் என்பவரை வைத்து கொண்டு லட்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று துலுக்கம் தண்டலம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மனையின் பத்திரப்பதிவு தொகையை மறு மதிப்பீடு செய்ய ரூ20ஆயிரம் லட்சத்தை பன்னீர்செல்வம் வாங்கியபோது மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை DSP கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இதே நேரத்தில் சார்பதிவாளர் சென்னை, அண்ணாநகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராது ₹15,30,000 பணம் மற்றும் சொத்து ஆவண பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆள் வைத்து சம்பளம் தந்து அவர் மூலம் லட்சம் பெற்றால் தப்பித்து விடலாம் என எண்ணிய நிலையில் இன்று இருவரும் கம்பி எண்ணும் நிலை ஆளாகினர்.