Begin typing your search above and press return to search.
வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்
திருவண்ணாமலையில் வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்களை காவல்துறையினர் கலைந்துபோக செய்தனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலையில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அய்யப்பன் நகரில் உள்ள வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் இளைஞர்கள் பலர் மீன் பிடிக்க ஆர்வமாக தூண்டில் போடுவதை படத்தில் காணலாம். நீர் வரத்து அதிகம் உள்ளதால் அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் அங்கு இருப்பவர்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தினர்.