மெட்டாலா பகுதியில் வரும் 21ம் தேதி மின்தடை அறிவிப்பு
பைல் படம்.
By - P.Nathan, Reporter |19 July 2022 3:00 AM GMT
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மெட்டாலா பகுதியில் வரும் 21ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராசிபுரம் தாலுக்கா, மெட்டாலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாக்குட்டை, கணவாய்ப்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பஞ்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊனந்தாங்கல், கரியாப்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu