/* */

பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்

பதிவு சான்று இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்
X

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், ராகி, காய்கறி பயிர்கள், பயறுவகை, எண்ணெய்வித்து மற்றும் கால்நடை தீவனப்பயிர்கள் போன்றவை அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்து விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, அனைத்து தனியார் ரகம் மற்றும் வீரிய ரக விதைகளை பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பதிவு சான்று வழங்கியுள்ளது.

இதன்படி விதை விற்பனை உரிமம் பெற்ற அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பதிவு சான்றினை ஒவ்வொரு தனியார் ரகத்திற்கும் உற்பத்தியாளர்களிடம் பெற்று விதை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இச்சான்றுகளை விதை ஆய்வாளர்களிடம், ஆய்வின்போது சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத, விதை விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டத்தின் கீழ் விதை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Jan 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...