Begin typing your search above and press return to search.
டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு
நாமக்கல் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் கணேசபுரம், புதுச்தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (62) ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., அவர், நேற்று காலை, 8:50 மணிக்கு, தனது வீட்டில் இருந்து டூ வீலரில் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். நாமக்கல் மணிக்கூண்டு அருகே சென்றபோது, அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவரத்தினம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.