பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் கவனத்திற்கு
ஏற்கனவே பிளஸ் 2 தேர்வு எழுதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறாதவர்கள், வரும் 25ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, பிளஸ் 2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், தபால் மூலம் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாமக்கல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத் தாட்களாக மாற்றிடும் வகையில் கெஜட்டில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மதிப்பெண் சான்றிதழை, நாமக்கல் மோகனூர் ரோட்டில், தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, உதவி இயக்குனர் அலுவகத்தை நேரில் அனுகி பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழை பெறுவதற்கு தேர்வு எழுதிய ஹால் டிக்கட், ஆதார் அட்டை அல்லது ஏதவாது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து, வருகிற 25ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.