Begin typing your search above and press return to search.
கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
HIGHLIGHTS
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதால், கொல்லிமலையில் உள்ள மதுக்கடைகள் ஆக.1 ம்தேதி முதல் 3ம் தேதிவரை 3 நாட்கள் அடைக்கப்படும்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, மலர்க்கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வருகிற ஆக.2, 3ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு மற்றும் செங்கரை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை முழுமையாக மூட வேண்டும். மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.