/* */

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 254 கோரிக்கை மனு அளிப்பு

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், கலெக்டரிடம் பொதுமக்கள் 254 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

HIGHLIGHTS

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 254 கோரிக்கை மனு அளிப்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 254 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

கூட்டத்தில் டிஆர்ஓ (பொ) மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது