/* */

நாமக்கல் நகராட்சியில் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

நாமக்கல் நகராட்சியில் இன்று நடைபெற்ற முகாமில், 45 வயதிற்கு மேற்பட்ட 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
X

நாமக்கல் நகராட்சி சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொரேனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று நோய் தொற்று உள்ளதாக என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், நோய்த்தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மறுபுறம், தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்துள்ளதை அடுத்து நாமக்கல்லில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நாமக்கல் நகராட்சி சார்பில் 45 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், நகராட்சிக்கு உட்பட்ட 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக, ஏராளமான பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை, காவல் துறையினர் சமூக இடைவெளி விட்டு நிற்கும்படி அறிவுறுத்தி, ஒழுங்குபடுத்தினர். கூட்ட நெரிசலை தவிர்க்க, டோக்கன் வழங்கிய போலீசார், அசம்பாவிதம் தவிர்க்க அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 3 Jun 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!