/* */

இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான பாகிஸ்தான் எம்பி உரை

இந்தியா நிலவில் இறங்கும் போது, ​​கராச்சி திறந்தவெளி சாக்கடையில் விழுந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுகிறது என பாகிஸ்தான் எம்பி கூறினார்

HIGHLIGHTS

இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான பாகிஸ்தான் எம்பி உரை
X

பாகிஸ்தான் நாடாளுமன்றஉறுப்பினர் சையத் முஸ்தபா கமால்,

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது முஸ்தபா கமாலின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றஉறுப்பினர் சையத் முஸ்தபா கமால், இந்தியாவின் சாதனைகள் மற்றும் கராச்சியில் உள்ள ஆபத்தான சூழ்நிலையை ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலவு தரையிறங்கும் பணியைக் குறிப்பிட்டார்.

முட்டாஹிடா குவாமி மூவ்மென்ட் பாகிஸ்தான் (MQM-P) தலைவர், இந்தியா நிலவில் இறங்கும் போது, ​​கராச்சி திறந்தவெளி சாக்கடையில் விழுந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுகிறது என கூறினார்

"இன்று, கராச்சியில் உள்ள நிலை என்னவென்றால், உலகம் நிலவுக்குச் செல்லும் போது, ​​​​கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறார்கள், அதே திரையில், இந்தியா நிலவில் இறங்கிய செய்தி, இரண்டு வினாடிகளுக்குப் பிறகு, கராச்சியில் திறந்தவெளி சாக்கடையில் ஒரு குழந்தை இறந்ததாக செய்தி வருகிறது" என்று கமால் நாடாளுமன்றத்தில் தனது உரையில் கூறினார்.

கராச்சியில் சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையை அவர் மேலும் எடுத்துரைத்தார். கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி கூறினார்.

"பாகிஸ்தானின் வருவாய் இயந்திரம் கராச்சி. பாக்கிஸ்தானின் தொடக்கத்தில் இருந்து செயல்படும் இரண்டு துறைமுகங்களும் கராச்சியில் உள்ளன. கராச்சி முழு பாகிஸ்தானுக்கும், மத்திய ஆசியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நுழைவாயிலாக இருக்கிறது. 15 ஆண்டுகளாக, கராச்சியில் தண்ணீர்ர் இல்லை. வந்த தண்ணீரைக் கூட, டேங்கர் மாஃபியா பதுக்கி வைத்து கராச்சி மக்களுக்கு விற்றுவிட்டார்கள்.

"நம்மிடம் மொத்தம் 48,000 பள்ளிகள் உள்ளன, ஆனால் அதில் 11,000 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. சிந்துவில் 70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை, நாட்டில் மொத்தம் 2,62,00,000 குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. நாம் இதில் கவனம் செலுத்தினால், நாட்டின் தலைவர்கள் சரியான தூக்கம் கூட வரக்கூடாது," என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

Updated On: 16 May 2024 5:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணும் பணிக்கான நடைமுறைகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  4. ஈரோடு
    கோபியில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்: மாட்டு வண்டி ஊர்வலத்துடன்...
  5. வீடியோ
    ஆட்டம் தமிழகத்திலிருந்து ஆரம்பம் | Annamalai-க்கு Amitshah ஆர்டர் |...
  6. ஆன்மீகம்
    உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் மாம்பழம் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளித்த பிறகு தலை முடியை துவட்டாமல் விடுபவரா நீங்கள்?
  9. கோவை மாநகர்
    தண்ணீர் தொட்டிக்குள் மின்சாரம் தாக்கி இருவர் பலி
  10. தொழில்நுட்பம்
    ரியல்மி 13 ப்ரோ என்ன விலை?