திருவண்ணாமலையில் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்
தீபத்திருவிழாவில் குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் செய்த பக்தர்கள், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜன், குழந்தை பேறு இல்லாமல், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டார். அதனால், அண்ணாமலையாரே, வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தையாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டு வேண்டுதல் வைப்பர். அதன்படி, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியர் தங்கள் குழந்தையை, கரும்பு தொட்டிலில் வைத்து சுமந்து, மாடவீதி வலம் சென்று, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதனால் கரும்புகள் அதிகளவு விற்பனையானது.
கோவில் வளாகத்திலேயே திருவிழா நடந்தாலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கடவுளுக்கு தங்கள் நேர்த்திக்கடனைச் செய்ய வேண்டுமெனக் கரும்பு தொட்டிலோடு மாடவீதியை வலம் வருகிறார்கள்.
ஒவ்வொரு தீபத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரும்பு தொட்டில் மூலம் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா விதிகளைக்காட்டி திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தீபத் திருவிழா நடைபெறும் 14 நாட்களும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.